• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

உலகின் “அரிசி மன்னன்” பட்டத்தை கைப்பற்றிய இந்தியா : உற்பத்தியில் சீனாவை முந்திய சாதனை

athibantv by athibantv
ஜனவரி 1, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 475 📋

உலகின் “அரிசி மன்னன்” பட்டத்தை கைப்பற்றிய இந்தியா : உற்பத்தியில் சீனாவை முந்திய சாதனை

பல ஆண்டுகளாக அரிசி உற்பத்தியில் முன்னணியில் இருந்த சீனாவை பின்னுக்குத் தள்ளி, உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உயர்ந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அரிசி ஏற்றுமதி முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்த வரலாற்றுச் சாதனையை இந்தியா எவ்வாறு நிகழ்த்தியது என்பதைப் பார்ப்போம்.

அரிசி உற்பத்தியில் நீண்ட காலமாக நிலவிய சீனாவின் ஆதிக்கத்திற்கு இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. சீனாவைத் தாண்டி, உலகளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா தற்போது முதலிடத்தைப் பிடித்துள்ளது.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

உலக அரிசி உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 28 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், இது கால்பகுதியை விட அதிகமானதாகவும் அமெரிக்க வேளாண்துறை வெளியிட்ட சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் வெளியான அந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ள நிலையில், சீனாவின் உற்பத்தி 146 மில்லியன் மெட்ரிக் டன்னாக பதிவாகியுள்ளது. இதன் மூலம், உலகின் “அரிசி ராஜா” என்ற பட்டத்தை இந்தியா பெற்றுள்ளது.

அரிசியின் வரலாற்றைப் பற்றி பேசினால், இந்தியாவின் பெயர் முன்னணியில் நிற்கும். ஏனெனில், பழங்காலம் முதல் இந்தியாவில் அரிசி பயிரிடப்பட்டு வந்ததுடன், அது அன்றாட உணவிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1.23 லட்சம் அரிசி வகைகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 60 ஆயிரம் வகைகள் இந்தியாவிலேயே காணப்படுகின்றன.

இது இந்தியாவில் அரிசி சாகுபடியின் பல்வகைத் தன்மையையும், அதன் வளமையும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், உற்பத்தி அளவில் இந்தியா நீண்ட காலமாக சீனாவை விட பின்தங்கியே இருந்து வந்தது.

இன்று இந்தியாவில் விளையும் அரிசி உலகின் 172 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம், அரிசி இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய பொருளாதார கருவியாகவும் மாறியுள்ளது. 2024–25 நிதியாண்டில், இந்தியா 4 லட்சத்து 50 ஆயிரத்து 840 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் பொருட்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த ஏற்றுமதியில் அரிசி மட்டும் 24 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. பாஸ்மதி மற்றும் பாஸ்மதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி மூலம், ஒரே ஆண்டில் இந்தியா 1 லட்சத்து 5 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மதிப்பிலான அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது.

இந்த வளர்ச்சியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறும் உள்ளது. சுதந்திரம் பெற்ற காலத்தில், இந்தியா ஆண்டுக்கு வெறும் 20.58 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால், 2025ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 152 மில்லியன் மெட்ரிக் டன்னாக அபாரமாக உயர்ந்துள்ளது.

1960களில் இந்தியா கடும் உணவுத் தானிய பற்றாக்குறையை எதிர்கொண்டபோது, நீண்ட தண்டு கொண்ட பாரம்பரிய நெல் வகைகளே அதிகம் பயிரிடப்பட்டன. இதனால், ஒரு ஹெக்டேருக்கு சுமார் 800 கிலோ மட்டுமே மகசூல் கிடைத்தது.

அந்த காலகட்டத்தில் யூரியா போன்ற ரசாயன உரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. உரம் மற்றும் கூடுதல் நீர் பயன்படுத்தினாலும், குட்டையான மற்றும் வலுவான தண்டு கொண்ட நெல் வகைகள் இல்லாதது பெரிய தடையாக இருந்தது. இதனால், அதிக மகசூல் தரக்கூடிய குள்ள நெல் வகைகளின் தேவை உருவானது.

இந்த நிலையில், தைவான் தனது குள்ள நெல் வகையான ‘தைச்சுங் நேட்டிங்–1’ (TN1) ஐ இந்தியாவிற்கு வழங்கியது. இதுவே இந்தியாவில் பசுமை புரட்சிக்கு அடித்தளமாக அமைந்து, நெல் சாகுபடியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து, 1968ஆம் ஆண்டு சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் ‘ஐ.ஆர்–8’ என்ற புதிய நெல் வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்த வகை “அதிசய அரிசி” என்று அழைக்கப்பட்டு, உற்பத்தியில் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்தது.

1969ஆம் ஆண்டு முதல், இந்திய விஞ்ஞானிகள் இவ்வகைகளை கலப்பினமாக உருவாக்கத் தொடங்கினர். ஒடிசாவைச் சேர்ந்த T-141 என்ற உள்ளூர் நெல் வகையை TN1 உடன் கலப்பினம் செய்து, ‘ஜெயா’ என்ற புதிய குள்ள நெல் வகை உருவாக்கப்பட்டது. இதன் தண்டு நீளம் 150 சென்டிமீட்டரிலிருந்து 90 சென்டிமீட்டராகக் குறைந்ததால், மகசூல் கணிசமாக உயர்ந்தது.

உலகில் அதிக அளவில் பாஸ்மதி அரிசி உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது. பாஸ்மதி அரிசி ஏற்றுமதி மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இந்திய பாஸ்மதி வகைகளுக்கு உலகளாவிய அளவில் தனித்துவமான சந்தை உருவாகியுள்ளது. மேலும், உலகிலேயே மிக நீளமான அரிசி தானியத்தை உற்பத்தி செய்யும் சாதனையையும் இந்தியா பெற்றுள்ளது.

அரிசி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா முதலிடத்தில் இருந்தாலும், ஒரு முக்கிய அம்சத்தில் இன்னும் சவால் தொடர்கிறது. சீனாவை விட இந்தியாவில் நெல் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருந்தாலும், ஒரு ஹெக்டேருக்கு கிடைக்கும் மகசூல் குறைவாகவே உள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத் தரவுகளின்படி, 1950–51ஆம் ஆண்டில் இந்தியா ஒரு ஹெக்டேருக்கு வெறும் 668 கிலோ அரிசி மட்டுமே உற்பத்தி செய்தது. 2025–26ஆம் ஆண்டில் இந்த அளவு சராசரியாக ஹெக்டேருக்கு 4,390 கிலோவாக உயரும் என அமெரிக்க வேளாண்துறை (USDA) கணித்துள்ளது.

இருப்பினும், இது உலக சராசரியைவிட குறைவானதே. சீனாவில் ஒரு ஹெக்டேருக்கு சுமார் 7,100 கிலோ அரிசி கிடைக்கும் நிலையில், இந்தியாவின் 4,390 கிலோ மகசூல் எதிர்காலத்தில் கடந்து செல்ல வேண்டிய முக்கிய சவாலாகவே பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

புதுக்கோட்டையில் வடமாநில ரயில்வே கேட் பணியாளரை கத்தியால் தாக்கிய ரவுடி – பரபரப்பு

Next Post

புத்தாண்டு நலன், செழிப்பு, முன்னேற்றம் தரட்டும் – பிரதமர் மோடியின் வாழ்த்து!

Next Post

புத்தாண்டு நலன், செழிப்பு, முன்னேற்றம் தரட்டும் – பிரதமர் மோடியின் வாழ்த்து!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

“மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

ஏப்ரல் 18, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!
  • பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!
  • “மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு” – சிக்கிம் பேரணி வீடியோவைப் பகிர்ந்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கருத்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

பொன்னேரியில் ராகுல் காந்தி பேச்சு: பாதியிலேயே கலைந்து சென்ற பொதுமக்கள் – வெறிச்சோடிய நாற்காலிகள்!

ஏப்ரல் 18, 2026
பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

பெங்களூரு வந்தடைந்தன 4 தென்னாப்பிரிக்க சிறுத்தைகள்: பன்னேருகட்டா பூங்காவில் 30 நாட்கள் தனிமைப்படுத்தல்!

ஏப்ரல் 18, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN