காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம்: உறுப்பினர்கள் தொடர்ச்சியாக புகார்கள் – பரபரப்பு

Date:

காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம்: உறுப்பினர்கள் தொடர்ச்சியாக புகார்கள் – பரபரப்பு

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், பல உறுப்பினர்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை தொடர்ந்து முன்வைத்ததால் கூட்ட அரங்கில் பரபரப்பு நிலவியது.

மாநகராட்சி மேயர் மகாலட்சுமி தலைமையில் நடப்பு ஆண்டின் இறுதி மாமன்றக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒரே அமர்வில் மொத்தம் 62 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பாஜக சார்பில் 21வது வார்டு உறுப்பினர் விஜிலாவும், 46வது வார்டு உறுப்பினர் கழல்விழியும் தங்களது வார்டுகளில் உள்ள அடிப்படை வசதி குறைகள் குறித்து பேசினர்.

அதன்பின்னர், 11, 16 மற்றும் 41வது வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சினைகளை மாறி மாறி முன்வைத்தனர்.

இந்த நிலையில், புகார்கள் தெரிவித்து முடித்த மாமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக அரங்கைவிட்டு வெளியேறியதால், கூட்டம் நிறைவடையும் முன்பே மாமன்றக் கூடம் வெறிச்சோடி காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

AI – அணு ஆயுதப் போர்: மனித கற்பனையை மீறும் பேரழிவு

AI – அணு ஆயுதப் போர்: மனித கற்பனையை மீறும் பேரழிவு உலகளாவிய...

தூத்துக்குடி: பைபர் படகு விபத்து – மூன்று மீனவர்கள் காயம்

தூத்துக்குடி: பைபர் படகு விபத்து – மூன்று மீனவர்கள் காயம் தூத்துக்குடி புதிய...

திருப்பூரை குப்பை மேடாக மாற்றும் முயற்சி – திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்

திருப்பூரை குப்பை மேடாக மாற்றும் முயற்சி – திமுக அரசுக்கு எதிராக...

இந்தியாவில் விமான எஞ்சின் உற்பத்தி மையம் அமைக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு – பாதுகாப்புத் துறையில் முக்கிய முன்னேற்றம்

இந்தியாவில் விமான எஞ்சின் உற்பத்தி மையம் அமைக்க ரோல்ஸ் ராய்ஸ் முடிவு...