சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள், மூலிகைகள் சேதம்

Date:


சிறுமலை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீ – அரிய வகை மரங்கள், மூலிகைகள் சேதம்

மதுரை மாவட்டம் சிறுமலை வனப்பகுதியில் ஏற்பட்ட கடும் காட்டுத்தீ, அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்தில், பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் கருகி சாம்பலானதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சிறுமலை வனப்பகுதி, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு திடீரென வனப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்னல் வேகத்தில் பரவிய இந்த காட்டுத்தீ, சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வனப்பகுதியை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால், தீ வேகமாகப் பரவியதாகவும், அதை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்ததும் தீயணைப்புத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, வனத்துறை ஊழியர்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், சுற்றியுள்ள பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த காட்டுத்தீயால் அரிய வகை மூலிகை மரங்கள், சிறிய செடிகள் மற்றும் புல்வகைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதேபோல், வனவிலங்குகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.

காட்டுத்தீ ஏற்படுவதற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனிதர்களின் அலட்சியம், புகையிலை அல்லது தீப்பொறி வீச்சு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், வனப்பகுதிகளில் இதுபோன்ற தீ விபத்துகள் மீண்டும் ஏற்படாமல் இருக்க கண்காணிப்பை அதிகரிக்கவும், கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...