தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்

Date:

தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், சுற்றுலா பேருந்து உரிமையாளரை பயணிகள் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காரிமங்கலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுற்றுலா பயணமாக சென்ற பேருந்தில், பயணிகளிடம் முழு கட்டணத்தை செலுத்துமாறு பேருந்து உரிமையாளரும் ஓடசல்பட்டியைச் சேர்ந்தவருமான அன்பழகன் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணிகள் சிலர் அவரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த அன்பழகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜஸ்தான்: கல்வீச்சு தாக்குதல் எதிரொலி – போலீசார் குவிப்பு

ராஜஸ்தான்: கல்வீச்சு தாக்குதல் எதிரொலி – போலீசார் குவிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்...

கலிஃபோர்னியாவில் உயர் மின்னழுத்தக் கம்பி விழுந்ததில் தீ விபத்து – 4 பேர் காயம்

கலிஃபோர்னியாவில் உயர் மின்னழுத்தக் கம்பி விழுந்ததில் தீ விபத்து – 4...

வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற கமலி – பொய்யான தகவலுக்கு எதிர்ப்பு!

வங்கி தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்ற கமலி – பொய்யான...

தென்காசி : குற்றாலத்தில் குவியும் சுற்றுலா கூட்டம்

தென்காசி : குற்றாலத்தில் குவியும் சுற்றுலா கூட்டம் வார இறுதி நாட்களும், பள்ளிகளுக்கு...