தருமபுரி: காரிமங்கலத்தில் சுற்றுலா பேருந்து உரிமையாளர் மீது பயணிகள் தாக்குதல்
தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில், சுற்றுலா பேருந்து உரிமையாளரை பயணிகள் தாக்கும் சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரிமங்கலத்தில் இருந்து மேல்மருவத்தூருக்கு சுற்றுலா பயணமாக சென்ற பேருந்தில், பயணிகளிடம் முழு கட்டணத்தை செலுத்துமாறு பேருந்து உரிமையாளரும் ஓடசல்பட்டியைச் சேர்ந்தவருமான அன்பழகன் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், பயணிகள் சிலர் அவரை தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த அன்பழகன், தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கிருஷ்ணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்