மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து – பெண் கிளை மேலாளர் உயிரிழப்பு

Date:

மதுரை எல்ஐசி அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து – பெண் கிளை மேலாளர் உயிரிழப்பு

மதுரை நகரில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், பெண் கிளை மேலாளர் ஒருவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடத்தின் இரண்டாம் மாடியில் எல்ஐசி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 50-க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் அலுவலகத்தில் தீப்பற்றியது. தீ வேகமாக பரவியதால், கட்டடத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

ஆனால், கல்யாணி நம்பி என்பவரான கிளை மேலாளர் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கசிவு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூண்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர்...

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மது, மாது, ஊழல் –...

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி

அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ...