டிட்வா புயல் பாதிப்பு: சம்பா பயிர்களுக்கு நஷ்டஈடு கோரி விவசாயிகள் போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, டிட்வா புயலால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பரவலாக சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயல் காரணமாக பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனால் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கருக்கு தலா ரூ.35,000 இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.