கார் துரத்திச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

Date:

சென்னை: கார் துரத்திச் சென்ற போக்குவரத்து காவலர் விபத்தில் உயிரிழப்பு – ஓட்டுநர் கைது

சென்னை மடிப்பாக்கம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர், தப்பிச் சென்ற காரை துரத்திச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்.

மடிப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மேகநாதன், பள்ளிக்கரணை கைவெலி பகுதியில் வாகனங்களைச் சோதித்து வரும்போது, வேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முயன்றார். ஆனால் கார் ஓட்டுநர் நிற்காமல் தப்பிச் சென்றார்.

இதையடுத்து மேகநாதன் தனது இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றார். பள்ளிக்கரணை மேம்பாலம் பகுதியில் காரை மடக்க முயன்றபோது, அவர் தவறி விழுந்து, காரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவத்துக்குப் பின்னர் தப்பிச் சென்ற ஓட்டுநர் சாய்ராம்–ஐ, போலீசார் மூன்று மணிநேரத்திலேயே கைது செய்து, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கடல் நீரிலிருந்து குடிநீர் + பசுமை ஹைட்ரஜன்… உலகின் முதல் தொழிற்சாலையைத் திறந்து சீனா கவனம் ஈர்ப்பு!

கடல் நீரிலிருந்து குடிநீர் + பசுமை ஹைட்ரஜன்… உலகின் முதல் தொழிற்சாலையைத்...

நன்னடத்தை அடிப்படையில் விடுதலை… மீண்டும் நகை கொள்ளை – 1 கிலோ தங்கம் பறிமுதல்

கோவை: நன்னடத்தை அடிப்படையில் விடுதலை… மீண்டும் நகை கொள்ளை – 1...

அன்னதான திட்டம் தொடங்க வந்ததால் கருப்பு கொடி முடிவை மாற்றிய பாஜகவினர் – கொடைக்கானலில் பரபரப்பு

அன்னதான திட்டம் தொடங்க வந்ததால் கருப்பு கொடி முடிவை மாற்றிய பாஜகவினர்...

இண்டிகோ விமான சேவைகளில் 5% குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு

இண்டிகோ விமான சேவைகளில் 5% குறைப்பு – மத்திய அரசு அறிவிப்பு நாட்டின்...