சேலத்தில் தலைவாசல் காய்கறி சந்தை சேறும், சகதியுமாக… விவசாயிகள் சங்கம் அதிருப்தி – மாவட்ட ஆட்சியரிடம் மனு

Date:

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தினசரி காய்கறி சந்தை, தொடர்ச்சியான கனமழையால் சேறும், சகதியுமாக மாறி பயிர் விற்பனைக்கு தகாத நிலைக்கு சென்றுள்ளது. நுழைவாயில் முதல் சந்தையின் உள் பகுதிகள் வரை அனைத்திலும் மழைநீர் தேங்கி, வியாபாரிகளும் விவசாயிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

மழைநீர் சரியாக வடிகாலில் செல்லாததால் காய்கறி மூட்டைகளை இறக்கவும் ஏற்றவும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். தினசரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் இந்த சந்தைக்கு வருவதால் இத்தகைய சேறும் சகதியும் நிரம்பிய சூழல் அவர்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.

சந்தையின் சீரமைப்பு இன்றியமையாதது என்று தமிழ்ஜனம் தொலைக்காட்சியில் செய்திகள் வெளியானது. இதன் பின்னர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழுவினர் சந்தைக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும் எனக் கோரி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயிகளின் முக்கிய வருமான மூலமாக இருக்கும் இந்த சந்தையை அரசு விரைவாக சீரமைக்க வேண்டும் என விற்பனையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி ‘ரார் ஹோலி’ – 250 ஆண்டுகால வினோத வழிபாடு!

ராஜஸ்தான்: ஒருவர் மீது ஒருவர் எரியும் கட்டைகளை வீசி 'ரார் ஹோலி'...

“வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

"வளைகுடா கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளிக்கும்" - அதிபர் ட்ரம்ப்...

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: “தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்” – உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி அறிவுறுத்தல்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: "தீபத்தூணில் மலர் தூவ வேண்டும்" - உயர்நீதிமன்ற...

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின் சாதனை!

ஒடிசாவில் போக்குவரத்துப் புரட்சி: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த பாஜக அரசின்...