சிறைக்கைதிகள் நலத் திட்டங்கள் முடக்கம்? – அதிகாரிகளின் நடவடிக்கையால் பாதிப்பு என குற்றச்சாட்டு

Date:

சிறைத்துறையில் நடைபெறும் ஊழல்களை தடுக்கவும், கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் முடங்கியுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கைதிகளின் நல்வாழ்வு திட்டங்களை பாதிக்காமல் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு தரப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தின் மத்திய சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவிக்கும் கைதிகள், மறுசீரமைப்பு நோக்கத்துடன் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மதுரை சிறையில் நூல் பேண்டேஜ், அலுவலக கவர் தயாரிப்பு, வேலூர் சிறையில் காலணி உற்பத்தி போன்ற பணிகள் நீண்டகாலமாக நடைபெற்று வந்தன.

ஆனால், தயாரிப்புகளின் விற்பனையில் ஊழல் நடந்தது கண்டறியப்பட்டதையடுத்து, மதுரை சிறை எஸ்.பி. ஊர்மிளா உட்பட சம்பந்தப்பட்டவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து சிறைத்துறை வெளியிட்ட புதிய உத்தரவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புதிய விதிமுறையின்படி, சிறைச்சாலைகள் இனி அரசுத்துறைகளிடம் நேரடியாக ஆர்டர்கள் பெறக்கூடாது; டிஜிபி அலுவலகம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக இந்த நடைமுறையில் தாமதம் நிலவி வருவதால், உற்பத்திப் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனால், அரசின் வருமானம் மட்டுமல்லாது, கைதிகளின் வேலை வாய்ப்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஊழல் தடுப்பு அவசியமானாலும், புதிய கட்டுப்பாடுகள் காரணமாக கைதிகளுக்கு கிடைத்த ஒரே வருவாய்–படைத்தொழில் வாய்ப்பு பாதிக்கப்படுவது கவலைக்குரியது என சமூக அமைப்புகள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலைகளில் உற்பத்தித் திட்டங்கள் சீராக மீண்டும் தொடங்கப்பட வேண்டுமெனவும், கைதிகளின் மறுசீரமைப்பு முயற்சிகள் தடையின்றி நடைபெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர் பலி!

ஆத்தூர் அருகே சோகம்: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி முதியவர்...

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய மாலுமிகள் பலி!

ஹார்முஸ் ஜலசந்தி போர் பதற்றம்: ஈரான் நடத்திய தாக்குதலில் 3 இந்திய...

“அரசு அலுவலகம் 4 நாள்… பள்ளிக்கு லீவு”: பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

"அரசு அலுவலகம் 4 நாள்... பள்ளிக்கு லீவு": பாகிஸ்தானின் வினோதக் கட்டுப்பாடுகள்...

திருப்பதியில் எல்.முருகன் – நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி பெற்றனர்!

திருப்பதியில் எல்.முருகன் - நயினார் நாகேந்திரன் தரிசனம்: சங்கராச்சார்யரை சந்தித்து ஆசி...