விஜய் மக்கள் சந்திப்பு விரைவில்: தவெக துணை பொதுச்செயலாளர் தகவல்

Date:

விஜய்யின் மக்கள் சந்திப்பு பயணம் விரைவில் தொடங்கும் என்று தமிழக வெற்றிக் கழக (தவெக) துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். “அனைத்து அணிகளையும் வலுப்படுத்தி, நிர்வாகக் குழுவின் வழிகாட்டுதலின்படி எஸ்ஓபி விதிமுறைகளை பின்பற்றி மக்கள் சந்திப்பு நடத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியில் பல விதமான குறைகள் உள்ளதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், SIR-இல் உள்ள குளறுபடிகளை கண்டித்து தவெக சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

திருச்சியில் மலைக்கோட்டை, சறுக்குபாறை பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ராஜ்மோகன் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர்கள் சந்திரா, ஜெகன் மோகன், ரவிசங்கர், லால்குடி விக்னேஷ், கரிகாலன், அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செந்தில், துளசி, எஸ்.எஸ்.சிவா, சுந்தர், கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் ராஜ்மோகன் கூறியதாவது:

“வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து எழுப்பிய கோஷங்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கும் செங்கோட்டைக்கும் சென்று சேரும். 3 அடிக்கு மேல் மேடை அமைக்க கூடாது என்று கூறியவர்கள், தாங்களே 15 அடி மேடை அமைத்தனர். அனுமதி பெற்று நடத்தப்படும் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது.”

விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கேட்டபோது அவர் கூறினார்:

“விஜய்யின் போராட்ட முறை பொதுமக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் இருக்கும். அவர் வெளியிட்ட 10 நிமிட வீடியோவை மக்கள் பெருமளவில் பார்த்ததன் விளைவாக தேர்தல் ஆணைய சர்வரே செயலிழக்கும் நிலை ஏற்பட்டது. அவரது வார்த்தைகள் பெரும் விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.”

அவர் மேலும் கூறினார்:

“தமிழகத்தில் 29 வயதிற்குட்பட்ட 1.5 கோடி இளைஞர் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவை பெறக்கூடியது புதிய அரசியல் சக்திகளே. இதை உணர்ந்த மத்திய அரசு SIR முறையை திடீரென அதிதீவிரமாக கொண்டு வந்தது; மாநில அரசும் அதற்கு துணைபோல செயல்படுகிறது.

பிஹாரில் இதே முறையில் தேர்தல் நடத்தி அதன் விளைவால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தமிழகத்தில் அத்தகைய சூழல் வரக்கூடாது என்பதற்காகவே விஜய் அந்த வீடியோவை வெளியிட்டார். மாநிலம் முழுவதும் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து, அடுத்தடுத்த நாட்களில் விஜய் வெளியில் வந்து பேசுவார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் தமிழக அரசியலின் பாதையை மாற்றக்கூடியது.”

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் கட்சித் தலையீடு அதிகமாக உள்ளதாகவும், மக்கள் வாக்குரிமையை பாதுகாக்க தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் எனவும் ராஜ்மோகன் முடிவுற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை” – இயக்குநர் மோகன் ஜி

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை”...

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது திமுக பொங்கல் – அண்ணாமலை விமர்சனம்

அரசியல் செம்மையாக இருந்தால் அது தமிழர் பொங்கல்; அரசியல் சீர்குலைந்தால் அது...

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுக்கும் – தமிழிசை...

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்

12 நாட்களில் சபரிமலையில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன்...