ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற போன்டி ஓபன் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.
இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா சீலன் 11-7, 11-6, 11-7 என்ற நேரடி செட் கணக்கில் நியூசிலாந்து வீராங்கனை மெய்டன்-லீ கோவ் என்பவரை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
தமிழகத்தைச் சேர்ந்த 24 வயதான ராதிகாவுக்கு இது அவரது இரண்டாவது பிஎஸ்ஏ பட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.