• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 20, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Sport

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி: 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி

athibantv by athibantv
அக்டோபர் 20, 2025
in Sport
0
📢 WhatsApp Channel Join
👁️ 893 📋

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி:

7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Related posts

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

சிஎஸ்கே-வின் தொடர் தோல்விகள்: “தோனி மேஜிக்” இல்லாத நிலையில் தடுமாறும் அணி – இர்பான் பதான் விளாசல்!

ஏப்ரல் 7, 2026
ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஐபிஎல் 2026: சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!

ஏப்ரல் 4, 2026

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 5 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.


இந்தியா பேட்டிங்

இந்திய அணி முதலில் விளையாடி 26 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினர்.

சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் களமிறங்கிய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, ரசிகர்களை ஏமாற்றினார்.

14 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்த நிலையில் அவர் வீழ்ந்தார்.

ஹேசில்வுட் பந்துவீச்சில், மேட் ரென்ஷாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த விராட் கோலி ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.

8 பந்துகளைச் சந்தித்த அவர், மிட்செல் ஸ்டார்க் பந்தில் கூப்பர் கானொலியிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

3-வது விக்கெட்டுக்கு ஷுப்மன் கில்லுடன் ஸ்ரேயஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.

நிதானமாக ஆடிக்கொண்டிருந்த கேப்டன் கில்லை, நேதன் எல்லிஸ் ஆட்டமிழக்கச் செய்தார்.

18 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் அவர் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

ரன்கள் சேர்க்க முயன்ற ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கே.எல்.ராகுலும், அக்சர் படேலும் ஸ்கோரை உயர்த்த முயன்றனர்.

அக்சர் 38 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்த நிலையில், குனேமன் பந்தில் ஆட்டமிழந்தார்.

கே.எல்.ராகுல் 31 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 38 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வாஷிங்டன் சுந்தர் 10, ஹர்ஷித் ராணா 1 ரன் எடுத்தனர்.

கடைசியில் நித்திஷ் ரெட்டி 11 பந்துகளில் 19 ரன்கள் (2 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மழையின் குறுக்கீடு காரணமாக ஆடுகளம் இந்திய வீரர்களுக்கு ஒத்துழைக்கவில்லை.

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் மிட்செல் ஓவன், குனேமன், ஹேசில்வுட் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

நேதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார்க் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.


ஆஸ்திரேலியா பேட்டிங்

மழையின் காரணமாக டிஎல்எஸ் முறைப்படி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி இலக்கு 26 ஓவர்களில் 131 ரன்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர்.

டிராவிஸ் ஹெட் 8 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஹர்ஷித் ராணாவிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

பின்னர் மேத்யூ ஷார்ட் 17 பந்துகளில் 8 ரன்கள் எடுத்த நிலையில் அக்சர் பந்தில் ரோஹித்திடம் பிடிகொடுத்தார்.

3-வது விக்கெட்டுக்கு கேப்டன் மார்ஷும், ஜோஷ் பிலிப்பும் இணைந்து சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

அணியின் ஸ்கோர் 99-ஆக இருந்தபோது பிலிப், வாஷிங்டன் சுந்தர் பந்தில் வீழ்ந்தார்.

பின்னர் வந்த மேட் ரென்ஷாவும், மார்ஷும் நிதானத்துடன் விளையாடி அணியை வெற்றி இலக்கை எட்டச் செய்தனர்.

21.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

மிட்செல் மார்ஷ் 46 ரன்களும், மேட் ரென்ஷா 21 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


முன்னாள் கேப்டன்களை முடக்கிய ஸ்டார்க், ஹேசில்வுட்

ரோஹித் சர்மாவையும், விராட் கோலியையும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது அபாரமான பந்துவீச்சால் கட்டுப்படுத்தினர்.

ஸ்டார்க் பந்தில் ரோஹித் சர்மா ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்கள் எடுத்தார்; பின்னர் ஹேசில்வுட் பந்தில் ஆட்டமிழந்தார்.

விராட் கோலியை தனது அற்புதமான பந்துவீச்சால் முடக்கினார் மிட்செல் ஸ்டார்க்.

5-வது ஓவரில் ரன் எடுக்காமல் மெய்டன் ஓவர் கொடுத்தார் ஸ்டார்க்.

அதன் பின்னர் 7-வது ஓவரின் முதல் பந்திலேயே கோலி ஆட்டமிழந்தார்.


மழையின் குறுக்கீடு — 4 முறை

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய பேட்டிங்கின்போது மழை 4 முறை குறுக்கிட்டது.

இதனால் ஆட்டம் 26 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

ஸ்ரேயஸ் ஐயர், அக்சர் படேல் விளையாடிக் கொண்டிருந்தபோது 3 விக்கெட்டுக்கு 25 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்தது.

பின்னர் ஆட்டம் 49 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

11.5 ஓவரில் 37 ரன்களுக்கு மீண்டும் மழை.

அதன்பின் ஆட்டம் 35 ஓவர்களாக மாற்றப்பட்டது.

14.2 ஓவரில் மீண்டும் மழை; பின்னர் 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் 26 ஓவர்களாக முடிவடைந்தது.

இந்திய பேட்டிங்கின்போது மட்டும் மழை 4 முறை குறுக்கிட்டது.


500-வது போட்டியில் ரோஹித்

இந்திய முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா நேற்று நடைபெற்ற போட்டியில் தனது 500-வது சர்வதேச போட்டியில் விளையாடினார்.

இதன்மூலம் 500 சர்வதேச போட்டிகளில் விளையாடும் 5-வது இந்திய வீரராக அவர் பெயரடைந்தார்.

இதற்கு முன்பு:

  • சச்சின் டெண்டுல்கர் – 664 போட்டிகள்
  • விராட் கோலி – 551 போட்டிகள்
  • எம்.எஸ். தோனி – 535 போட்டிகள்
  • ராகுல் திராவிட் – 504 போட்டிகள்

ஆட்டநாயகன்

45 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


நித்திஷ் ரெட்டி அறிமுகம்

இந்திய அணியில் நித்திஷ் குமார் ரெட்டி முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

போட்டிக்கு முன் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு தொப்பி வழங்கி அணியில் வரவேற்றார்.

அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஓவன், மேத்யூ ரென்ஷா ஆகியோரும் ஒருநாள் போட்டியில் அறிமுகமானனர்.


2025-ம் ஆண்டின் முதல் தோல்வி

இது 2025-ம் ஆண்டில் இந்திய அணிக்கு கிடைத்த முதல் ஒருநாள் தோல்வி.

இதற்கு முன்பு 1978, 1980, 1991 ஆண்டுகளில் இதேபோல் ஆண்டின் கடைசியில் முதல் தோல்வி ஏற்பட்டது.


அடுத்த போட்டி

இவ்விரு அணிகளுக்குமிடையிலான 2-வது போட்டி அடிலெய்டு மைதானத்தில் அக்டோபர் 23 அன்று நடைபெறும்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Sport
Previous Post

தெற்கு ரயில்வே 17 நாட்களில் 85 சரக்கு ரயில்களை இயக்கி சாதனை

Next Post

8 ஆயிரம் மாணவர்கள் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ டிரெய்லர்

Next Post

8 ஆயிரம் மாணவர்கள் வெளியிட்ட ‘ஆண்பாவம் பொல்லாதது’ டிரெய்லர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

ஏப்ரல் 20, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!
  • சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!
  • நெல்லை ராதாபுரம் கல்குவாரியில் ₹5000 கோடி ஊழல்: திமுக அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என ராஜ்நாத் சிங் அதிரடி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

திருச்சி கிழக்கு தொகுதியில் பரபரப்பு: பிரச்சாரத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் லியோனி மீது கண்ணாடி பாட்டில் வீச்சு!

ஏப்ரல் 20, 2026
சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

சுரண்டிப் பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழகத்திற்கும் இடையிலான போர்: அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கடும் தாக்கு!

ஏப்ரல் 20, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN