• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Big-News

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

athibantv by athibantv
நவம்பர் 6, 2025
in Big-News, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3K 🔥 📋

அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாமதம் ஏன்? – சிபிஐ விளக்கம்

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் தாமதமானது குறித்து, சிபிஐ உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது மரணமடைந்தார். அவரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related posts

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026

இந்த மரணம் குறித்து அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, அஜித்குமார் காவல் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் குமரப்பன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. சிபிஐ சார்பில், விசாரணை முன்னேற்றம் குறித்து மூடிமுத்திரையிட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரர் தரப்பில், “உயர் நீதிமன்றம் முன்பே சிபிஐக்கு குறிப்பிட்ட காலக்கெடு வழங்கியிருந்தாலும், அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை,” என குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பில்,

“ஹைதராபாத் மத்திய தடயவியல் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வந்துள்ளது. ஆனால் டெல்லி தடயவியல் ஆய்வகத்தின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. அந்த முடிவுகள் கிடைத்த பின்னரே யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதில் தெளிவு பெற முடியும். அதன்பின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். எனவே சிறிது அவகாசம் தேவை,”

என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள்,

“முன்பே 6 வார அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவகாசம் கேட்பது ஏற்றுக்கொள்ள முடியாது,”

என்று குறிப்பிட்டனர். மேலும்,

“டெல்லி தடயவியல் ஆய்வகத்தை எதிர் மனுதாரராக நீதிமன்றம் தானாக இணைக்கிறது. அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வு முடிவுகளை 3 வாரங்களுக்குள் சிபிஐக்கு வழங்க வேண்டும்,”

என்றும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 27-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

“பணம் பறிப்பதும், எங்களைப் பிரிப்பதுமே ஜாய் கிரிஸில்டாவின் நோக்கம்” — ஸ்ருதி ரங்கராஜ்

Next Post

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு – லபுஷேன் மீண்டும் சேர்ப்பு

Next Post

ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு – லபுஷேன் மீண்டும் சேர்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!
  • மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!
  • டெல்லி ஹோட்டல் தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் லவ்கேஷ் பஜாஜ் அதிரடி கைது!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு: ஒப்பந்த ஊழியர் கோபிநாத் அதிரடி கைது!

ஜூன் 4, 2026
மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

மத்திய அரசு நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துக: தமிழக அரசுக்கு நயினார் வலியுறுத்தல்!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN