நள்ளிரவில் பிரச்சாரம் — விருதுநகரில் கிருஷ்ணசாமி மீது வழக்கு

Date:

நள்ளிரவில் பிரச்சாரம் — விருதுநகரில் கிருஷ்ணசாமி மீது வழக்கு

விருதுநகர் மாவட்டத்தில் நள்ளிரவுக்குப் பிறகும் பிரச்சாரம் நடத்தியதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மற்றும் இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு வரும் ஜனவரி 7-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சார வேளையில் பல மாவட்டங்களில் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி மக்களை சந்தித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டத்திலும் கிருஷ்ணசாமி பொதுமக்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறார். நேற்று நள்ளிரவு 1 மணி முதல் 2 மணி வரை ஆமத்தூர் அருகே வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், போலீசார் அனுமதி வழங்கிய நேரத்தை மீறி நள்ளிரவில் பிரச்சாரம் செய்ததாக கூறி, கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி கிழக்கு மாவட்டச் செயலாளர் குணம், வெள்ளூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி ஆகியோருக்கு எதிராக ஆமத்தூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக...

ஐரோப்பாவை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம் – மொசாட் அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத்...

ஒரே நாளில் இருவேளை தங்கம் விலை சரிவு — சவரன் 93,920 ரூபாயாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள்...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் — அடுத்த கல்வியாண்டில் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...