சென்னையில் மறுபடியும் பூத்துக் குலுங்கும் ஃபோர்டு தொழிற்சாலை: ரூ.3,250 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

Date:

சென்னையில் மறுபடியும் பூத்துக் குலுங்கும் ஃபோர்டு தொழிற்சாலை: ரூ.3,250 கோடி முதலீட்டு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னைக்கு அருகிலுள்ள மறைமலை nagar-ல், ரூ.3,250 கோடி முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இன்ஜின்கள் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்கு ஃபோர்டு நிறுவனம் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது. இதன் மூலம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக உள்ளது. இந்த ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

தமிழகம், நாட்டில் முன்னணியில் இருக்கும் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மாநிலமாக இருப்பதாகவும், குறிப்பாக வேலை வாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் மகளிர் வேலைவாய்ப்பில் முன்னிலை வகிப்பதாகவும் 2024–25 பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு அமெரிக்க பயணத்தின் போது ஃபோர்டு நிறுவன அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக இந்த முதலீடு திரும்பியிருக்கிறது. இது ஃபோர்டு மற்றும் தமிழ்நாடு இடையேயான நீண்டகால தொழில் உறவின் மறுபிறப்பாக கருதப்படுகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்து விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் தெரிவித்ததாவது:

“சென்னை மீண்டும் ஃபோர்டின் இல்லமாகிறது. இந்த முதலீடு வேலைவாய்ப்புகளையும், தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் சூழலையும் வலுப்படுத்தும். இந்தியாவின் ஆட்டோமொபைல் தலைநகரான தமிழ்நாட்டின் தொழில்துறை திறனை இது மீண்டும் நிரூபிக்கிறது” என பதிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக...

ஐரோப்பாவை குறிவைத்து ஹமாஸ் தாக்குதல் திட்டம் – மொசாட் அதிர்ச்சி தகவல்

இஸ்ரேலை தாக்கியதைப் போலவே, ஐரோப்பாவின் பல நாடுகளிலும் ஹமாஸ் தாக்குதல் நடத்தத்...

ஒரே நாளில் இருவேளை தங்கம் விலை சரிவு — சவரன் 93,920 ரூபாயாக குறைந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு தடவைகள்...

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டம் — அடுத்த கல்வியாண்டில் அமல்

தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...