விஜய் வழங்கிய ரூ.20 லட்ச நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பிய கரூர் பெண் — காரணம் என்ன?

Date:

விஜய் வழங்கிய ரூ.20 லட்ச நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பிய கரூர் பெண் — காரணம் என்ன?

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தவெக (தமிழக வெற்றி கழகம்) நடத்திய பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.

அந்த உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தவெக சார்பில் நிவாரணமாக தலா ரூ.20 லட்சம் வீதம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று மாமல்லபுரத்தில் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் உயிரிழந்த கோடங்கிபட்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷின் மனைவி சங்கவி, விஜய் வழங்கிய ரூ.20 லட்ச நிவாரணத் தொகையை திருப்பி அனுப்பியுள்ளார்.

அவர் இதுகுறித்து கூறியதாவது:

“வீடியோ கால் மூலம் பேசும்போது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைக் காண நேரில் வருவதாக விஜய் கூறினார். ஆனால், பின்னர் அவர்களை மாமல்லபுரத்துக்கு வரவழைத்து சந்தித்தார். எனவே, எனது வங்கிக் கணக்கில் வந்த ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்,” என தெரிவித்தார்.

சங்கவி மாமல்லபுரத்துக்கு செல்லாத நிலையில், ரமேஷின் தங்கை பூபதி மற்றும் உறவினர்கள் அர்ஜுனன், பாலு ஆகியோர் அங்கு விஜயைச் சந்தித்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

செங்கோட்டையனை நீக்குவதில் தயக்கம் இல்லை – இபிஎஸ் உறுதி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையானை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும்...

சுகாதார ஆவணங்களில் ஒரே மாதிரி நடைமுறை அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர்

சுகாதார ஆவணங்களில் ஒரே மாதிரி நடைமுறை அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள்...

இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இன்று டெஸ்ட் ஆட்டத்தில் மோதுகின்றன.

இந்தியா ‘ஏ’ – தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் இன்று டெஸ்ட்...

செங்கோட்டையன் ஒரே காரில் வந்ததாக எனக்கு தகவல் இல்லை… எடப்பாடி

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக...