சனாதன தர்மம் குறித்த பேச்சு: 3,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மணலி மனோகர் தலைமை!
சென்னை: இந்து மதம் மற்றும் சனாதன தர்மம் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறி, தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பொதுச்செயலாளர் மணலி மனோகர் தலைமையில் நடைபெற்ற இந்த எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தில், 3,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஆன்மீகப் பெரியோர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்குத் தங்களது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர்.
இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத்தலைவர் பரமேஸ்வரன், மாநிலச் செயலாளர்கள் சனில்குமார் மற்றும் ரவீந்திரன், மாநிலச் செய்தித் தொடர்பாளர் A.T. இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கோட்ட மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு எதிராகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு, மாநிலப் பொதுச்செயலாளர் மணலி மனோகர் தலைமையில் நடத்திய இந்த விஸ்வரூப போராட்டம், அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




