தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு: சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் (தவெக), ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை இல்லாத சூழலில் காங்கிரஸின் ஆதரவைக் கோரியிருந்தது. இதற்கு காங்கிரஸ் தேசிய தலைமை தற்போது பச்சைக்கொடி காட்டியுள்ளது.
காங்கிரஸின் இந்த ஆதரவு முடிவை அடுத்து, சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த காலங்களில் திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் அடிமை போல் இருந்ததாகவும், தற்போது தவெக உடனான இந்த புதிய கூட்டணியால் தங்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளதாகவும் கூறி, பல்வேறு புகைப்படங்களை ஏந்தி அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த அரசியல் நகர்வு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





