சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

Date:

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுகள் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடைத்தாள்களை கைகளால் திருத்துவதற்குப் பதிலாக, கணினி மூலம் டிஜிட்டல் முறையில் மதிப்பீடு செய்யப்படுவதால், திருத்தத்தில் ஏற்படும் பிழைகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

விடைத்தாள்களை முழுமையாக டிஜிட்டல் முறையில் திருத்தும் நடைமுறைக்கு சிபிஎஸ்இ மாறி வருவதன் காரணமாக, இந்த ஆண்டு முதல் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பிறகு மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை கைவிடப்பட உள்ளதாக அவர் கூறினார்.

அதே நேரத்தில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் தொடர்ந்து கைகளால் திருத்தப்படும் முறையிலேயே மதிப்பிடப்படும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறை மூலம் தேர்வு முடிவுகளில் வெளிப்படைத்தன்மையும் துல்லியமும் அதிகரிக்கும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜம்மு எல்லையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வீச்சு: பாகிஸ்தான் டிரோன் பயன்படுத்தியதாக தகவல்

ஜம்மு எல்லையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வீச்சு: பாகிஸ்தான் டிரோன்...

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலையில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம் மகா சிவராத்திரி...

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம் பெரம்பலூர்...

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை கன்னியாகுமரி...