திருக்கழுக்குன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் அரசு மருத்துவமனையில் நோயாளியை ஏற்ற வந்த 108 ஆம்புலன்ஸில் ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.
மேல் சிகிச்சைக்காக நோயாளி ஒருவரை அரசு மருத்துவமனைக்கு மாற்றுவதற்காக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆம்புலன்ஸின் உள்ளே இருந்த ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திடீரென தீப்பற்றி எரிந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தண்ணீர் பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
விபத்தில் யாருக்கும் பெரும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்திற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.