தூய்மை பணியாளர்களின் விசிலை பறித்ததாக குற்றச்சாட்டு: திமுக கவுன்சிலருக்கு எதிராக தவெகவினர் போராட்டம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில், தூய்மை பணியாளர்களிடம் இருந்து விசிலை பறித்து எறிந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான (திமுக) கவுன்சிலர் அயூப்கானை கண்டித்து (தவெக) நிர்வாகிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலின்படி, திமுக கவுன்சிலர் அயூப்கான், தூய்மை பணியாளர்கள் பயன்படுத்தி வந்த விசிலை பிடுங்கி எறிந்து, அதற்கு பதிலாக மினி மைக் செட் வழங்கியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தவெகவினர், சம்பந்தப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் விசில்களை வழங்கியதுடன், அவர்களுக்கு காலை உணவும் வழங்கினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வருகிறது.