ஆட்சியில் பங்கு எங்கள் உரிமை; தீர்மானம் மக்களிடம் – மாணிக்கம் தாக்கூர்
தமிழக அரசியல் வட்டாரத்தில் ஆட்சிப் பங்கீடு குறித்து விவாதம் தீவிரமடைந்துள்ளது. ஆட்சியில் பங்கு பெறுவது எங்களின் உரிமை என்றும், இறுதி முடிவை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய , “ஆட்சியில் பங்கு” என்ற கருத்து தமிழ்நாட்டின் அரசியல் நடைமுறைக்கு பொருந்தாது எனக் கூறினார். இந்த கருத்து, – கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
இது தொடர்பாக எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்ட மாணிக்கம் தாக்கூர், “நாங்கள் கேட்பது நீங்கள் தோல்வியடைந்த இடங்களைப் பற்றிதான்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், அதிகாரப் பகிர்வும் ஆட்சியில் பங்கேற்பும் தங்களின் உரிமை என வலியுறுத்திய அவர், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.