நாமக்கல் அருகே சமத்துவபுரம் – அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவலநிலையில்
வீடுகளை காலி செய்யும் நிலைமை; அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை
மாவட்டம், பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் வீடுகளை காலி செய்யும் நிலைமையில் உள்ளனர்.
சமத்துவபுரம், மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஆட்சியில் கட்டப்பட்டு சுமார் 100 வீடுகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
கட்டிய நாள் முதலே இங்கு அடிப்படை வசதிகள் வழங்கப்படவில்லை என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு எழுப்பினர். பல்வேறு துறைகளுக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், பலர் வீடுகளை காலி செய்து வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
மீதம் உள்ள குடியிருப்பவர்கள் வீடுகளை காலி செய்யும் முன், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.