டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு – ஆராயும் ரிசர்வ் வங்கி

Date:

டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு – ஆராயும் ரிசர்வ் வங்கி

இணைய வழி பணமோசடிகளில் குறைந்த தொகையை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

இந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் சிறிய அளவிலான இழப்புகள் ஏற்பட்டால், அதற்காக 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி மகாராஷ்டிராவை சேர்ந்த...

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பாஜக மகளிர் அணி அறிவிப்பு

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்...

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி

“தேர்தல் களத்தில் எதிர்க்கட்சிகளின் உண்மை முகம் வெளிப்படும்” – வி.பி.துரைசாமி தமிழ்நாட்டை சர்வதேச...

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம்

கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை விமானப்படையினரின் சைக்கிள் பயணம் கன்யாகுமரியில் இருந்து காஷ்மீர்...