டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு – ஆராயும் ரிசர்வ் வங்கி
இணைய வழி பணமோசடிகளில் குறைந்த தொகையை இழக்கும் வாடிக்கையாளர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக, பொதுமக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனுடன் சேர்ந்து இணைய மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த மோசடிகளை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த சூழலில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஏற்படும் மோசடிகளில் இருந்து வங்கி வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் வகையில், புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளில் சிறிய அளவிலான இழப்புகள் ஏற்பட்டால், அதற்காக 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.