சமூக அமைதியை பாதிக்கும் படங்களுக்கு சான்றிதழ் இல்லை – சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு விளக்கம்
சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க இயலாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு தெளிவுபடுத்தியுள்ளது.
“லட்சுமி – லாரன்ஸ் காதல்” என்ற திரைப்படத்திற்கு தணிக்கை அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான “யுரேகா” சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.
இந்த மனுவைத் தொடர்பாக, சென்சார் போர்டு தரப்பில் பதில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், சமூக ஒற்றுமையை குலைக்கும் விதமாக உருவாகும் திரைப்படங்களுக்கு சான்றிதழ் வழங்க முடியாது என்றும், குறிப்பிட்ட இந்த திரைப்படம் சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் முழுவதுமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலான விசாரணை வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது