செவ்வாய் கிரகத்தில் துளையிட்டு ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி ரோவர்
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி ரோவர் துளையிடும் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தருணத்தில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
நாசாவின் கியூரியாசிட்டி ரோவர், மார்ஸ் கிரகத்தில் தொடர்ந்து பல்வேறு அறிவியல் ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாக, சமீபத்தில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் துளையிட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த ஆய்வு நடவடிக்கைகளின் போது, செவ்வாய் கிரகத்தின் இருண்ட இரவில் ரோவரில் பொருத்தப்பட்டுள்ள வாட்சன் கேமரா மற்றும் LED விளக்குகளின் உதவியுடன், பாறைகளின் இடுக்குகள் மற்றும் துளையிடப்பட்ட பகுதிகள் மிக அருகில் இருந்து தெளிவாக படம்பிடிக்கப்பட்டுள்ளன.
ரோவர் சேகரித்து வரும் இந்த பாறை மாதிரிகள், எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள ‘மார்ஸ் சாம்பிள் ரிட்டர்ன்’ திட்டத்தின் மூலம் பூமிக்கு கொண்டு வரப்பட உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.