நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? – அமைச்சர் காந்தியிடம் அதிருப்தி வெளிப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடைபெற்ற கைத்தறித் துறை சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத அமைச்சர் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டித்ததாக தகவல் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கலைவாணர் அரங்கில் கைத்தறித் துறை ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. ஆனால் அந்த நிகழ்வில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த முதலமைச்சர், பின்னர் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் காந்தியிடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. வரவேற்பின் போது புத்தகம் வழங்க வந்த அமைச்சர் காந்தியை, முதலமைச்சர் நேரடியாக கடிந்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.