“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”
மத்திய அரசு நடாத்தும் முத்ரா கடன் திட்டம் மற்றும் பிரதமர் வேலை வாய்ப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக 9,270 கோடி ரூபாய் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பாரத் ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாரத் ஸ்டேட் வங்கியின் புதிய கிளை மற்றும் ஏடிஎம் மையம் சென்னையின் மகுடஞ்சாவடி பகுதியில் திறக்கப்பட்டது.
இந்த புதிய கிளையை வங்கியின் மண்டல பொதுமேலாளர் ஹரிதா பூர்ணிமா திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி சேவை தொடங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சேலையில் கல்விக்கடனுக்காக மத்திய அரசு சார்பில் 85 கோடி ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.