வத்தலகுண்டு அருகே உற்சாகமாக நடந்த வாழைப்பழ வீச்சுத் திருவிழா!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள சோலைமலை அழகர் பெருமாள் ஆலயத்தில், பாரம்பரிய வாழைப்பழம் வீசும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள இக்கோயிலில் முதலில் இறைவனுக்கு விசேஷ வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பல வகையான வாழைப்பழங்களை ஆண்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு வந்து ஆலயத்தை அடைந்தனர்.
சன்னிதியில் அர்ப்பணிக்கப்பட்ட வாழைப்பழங்கள் பின்னர் கோபுர நுழைவாயிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு திரண்டிருந்த பக்தர்களை நோக்கி வாழைப்பழங்கள் வீசப்பட்டன.
பிரசாதமாக கிடைத்த அந்த வாழைப்பழங்களை பக்தர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு, தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர்.