• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 18, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

ஈரான் வர்த்தகத்திற்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

athibantv by athibantv
ஜனவரி 15, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 862 📋

ஈரான் வர்த்தகத்திற்கு 25% வரி – ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் வணிகத் தொடர்பு வைத்துள்ள நாடுகளுக்கு உடனடியாக 25 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தத் தீர்மானம் நடைமுறைக்கு வந்தால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கடும் பொருளாதார பாதிப்பை சந்திக்க நேரிடும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான செய்தி தொகுப்பு இதோ:

ஈரானில் தொடர்ந்து 13 நாட்களாக நீடித்து வரும் பொதுமக்கள் போராட்டங்கள், கடந்த 47 ஆண்டுகளில் காணாத அளவிற்கு தீவிர நிலையை எட்டியுள்ளன. அதிகரிக்கும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள், தற்போது நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி தலைமையிலான அடிப்படைவாத இஸ்லாமிய மதகுரு ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையாக மாறியுள்ளது.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் ஈரான் அரசு மற்றும் உச்ச தலைமைக்கு எதிரான இந்த மக்கள் எழுச்சி, மிகப்பெரிய சவாலாக உருவாகியுள்ளது.

போராட்டங்களில் ஈடுபடுவோர் “கடவுளின் எதிரிகள்” எனக் கருதப்படுவார்கள் என்றும், அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஈரானின் தலைமை வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில், போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள், அமெரிக்க அதிபர் ட்ரம்பை மகிழ்விப்பதற்காக செயல்படும் வன்முறையாளர்கள் என உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுவரை நடைபெற்ற மோதல்களில் 646 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் 10,700-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன், ஈரானில் போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை காரணமாகக் கொண்டு, அந்நாட்டுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். அதே சமயம், ஈரான் மக்களின் சுதந்திரத்திற்காக அமெரிக்கா உதவ தயாராக இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் 25 சதவீத உடனடி வரி விதிக்கப்படுவதாக ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதன் விளைவாக, ஈரானுடன் அதிக அளவில் வணிகம் செய்து வரும் இந்தியா, சீனா, ரஷ்யா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முன்னதாக, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதை காரணமாகக் காட்டி, இந்தியாவிற்கு முதலில் 25 சதவீதமும், பின்னர் மேலும் 25 சதவீதமும் வரியை ட்ரம்ப் விதித்திருந்தார். சமீபத்தில், இந்தியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு கூடுதலாக 500 சதவீத வரி விதிக்கும் சட்ட மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்தை சீனாவே வாங்கி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா ஈரானின் இரண்டாவது பெரிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகளில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன.

கடந்த நிதியாண்டில், இந்தியா–ஈரான் இருதரப்பு வர்த்தகம் சுமார் 15,160 கோடி ரூபாயாக இருந்தது. இதில், 11,191 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இந்தியா ஈரானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதே நேரத்தில், 3,970 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஈரானிலிருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவிற்கு சுமார் 7,220 கோடி ரூபாய் அளவிலான வர்த்தக உபரி கிடைத்துள்ளது.

ஈரானின் சர்க்கரை மற்றும் அரிசி தேவைகளில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான அளவை இந்தியாவே வழங்கி வருகிறது. ஆண்டுதோறும் சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்பிலான 12 லட்சம் டன் அரிசி இந்தியாவிலிருந்து ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மக்கள் போராட்டங்கள் தொடங்கியதன் பின்னர், ஈரானுக்கான இந்திய ஏற்றுமதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, சுமார் 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பாற்பட்ட வகையில், உரங்கள், வேளாண் இரசாயனங்கள், இயந்திரங்கள், உலோகங்கள், இரும்பு மற்றும் எஃகு, ரசாயனப் பொருட்கள், மருந்துகள், பதப்படுத்தப்பட்ட தாதுக்கள், பாலியஸ்டர் நூல்கள், நெய்த துணிகள் மற்றும் ரப்பர் தயாரிப்புகளும் இந்தியாவிலிருந்து பெருமளவில் ஈரானுக்கு அனுப்பப்படுகின்றன.

அதேபோல், பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி தயாரிப்புகள், இயற்கை மற்றும் வளர்ப்பு முத்துக்கள், மதிப்புமிக்க ரத்தினங்கள், தோல் பொருட்கள், பாதாம், பிஸ்தா, பேரீச்சம்பழம் மற்றும் குங்குமப்பூ போன்றவை ஈரானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

மேலும், பாகிஸ்தானைத் தவிர்த்து, ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நோக்கில், ஈரானின் சபாகர் துறைமுகத்தில் உள்ள ஷாஹித் பெஹெஷ்டி வளாகம் உள்ளிட்ட இரண்டு முனையங்களை இந்தியா 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது.

சபாகர் துறைமுகத்திலிருந்து ஈரானின் சிஸ்தான் பகுதி வழியாக, ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள பலுசிஸ்தானின் தலைநகரான சஹேடான் வரை சுமார் 600 கிலோமீட்டர் நீளமான ரயில் பாதையையும் இந்தியா அமைத்து வருகிறது.

இந்த நிலையில், ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கும் ட்ரம்பின் அறிவிப்பு, இந்தியா–அமெரிக்கா இடையிலான உறவுகளை மேலும் பாதிக்கும் என அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை

Next Post

ஆர்எஸ்எஸ் தலைமைத்துவத்துடன் சந்திப்பு – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த குழு

Next Post

ஆர்எஸ்எஸ் தலைமைத்துவத்துடன் சந்திப்பு – சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த குழு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

“தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!
  • “பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!
  • “தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்பட்டவர் எடப்பாடி பழனிசாமி” – ஜி.கே.வாசன் புகழாரம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

“நாசிக் TCS மதமாற்ற விவகாரம்: இது திட்டமிடப்பட்ட சதி” – மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அதிரடி!

ஏப்ரல் 17, 2026
“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

“பிரதமர் மற்றும் ராணுவத்தை அவமதிப்பதா?” – நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN