• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 17, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழித் தாக்குதலுக்கான புதிய சதி

athibantv by athibantv
ஜனவரி 9, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.9K 🔥 📋

பயங்கரவாதிகளுக்கு நீச்சல், ஸ்கூபா டைவிங் பயிற்சி அளிக்கும் பாகிஸ்தான் – கடல் வழித் தாக்குதலுக்கான புதிய சதி

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் புதிய வடிவமாக, இந்தியாவை குறிவைத்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் ஆதரவுடன் லஷ்கர்-ஈ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகள், ஸ்கூபா டைவிங் மற்றும் நீச்சல் நிபுணர்களை உருவாக்கும் வகையில் பயங்கரவாத பயிற்சிகளை வழங்கி வருவதாக உளவுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை: நிலைகுலைந்த ஈரான் பொருளாதாரம் – அமெரிக்காவின் அதிரடியால் சரணடையும் சூழல்?

ஏப்ரல் 17, 2026
அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

அமெரிக்கா – ஈரான் போர் விரைவில் முடிவு: “மறுசீரமைக்க 20 ஆண்டுகள் ஆகும்” – அதிபர் ட்ரம்ப் அதிரடி!

ஏப்ரல் 15, 2026

பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்கள் தாக்கி முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 100-க்கும் அதிகமான தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதோடு, பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளங்களும் இந்திய தாக்குதலில் சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்தது. “ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது” என்ற கடும் நிலைப்பாட்டை இந்தியா தெளிவாக எடுத்துக் காட்டியது.

இந்த சூழலில், லஷ்கர்-ஈ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-முகம்மது போன்ற பயங்கரவாத அமைப்புகள், பெண் ஜிகாதிகளை உருவாக்கும் புதிய திட்டங்களை தொடங்கியுள்ளன. அதேபோல், கல்வியறிவு பெற்ற ‘வைட் காலர்’ தீவிரவாதிகளை உருவாக்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில், மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் ஜிகாதிகளாக செயல்பட்டது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்திய இராணுவத்தின் கடுமையான கண்காணிப்பு மற்றும் அதிரடி நடவடிக்கைகளால், நில எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவும் முயற்சிகள் பெரும்பாலும் தடுக்கப்பட்டு வருகின்றன. எல்லையை மீறி நுழையும் தீவிரவாதிகள் உடனடியாக வேட்டையாடப்படுகின்றனர்.

இதனால், தற்போது இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் கடல் வழியை மாற்றுப் பாதையாகக் கொண்டு, நீருக்கடியில் மறைந்து செயல்படக்கூடிய ஸ்கூபா டைவர்ஸ் மற்றும் நீச்சல் வீரர்களுக்கான பயிற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த வகை முயற்சிகள் புதிதானவை அல்ல. 2008 ஆம் ஆண்டு, பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் மும்பை வந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், கொடூரமான மும்பை தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தற்போது, பாகிஸ்தானின் முக்கிய நகரங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு–காஷ்மீர் பகுதிகளிலும், நீச்சல் மற்றும் ஸ்கூபா டைவிங் போன்ற நீர்சார் பயிற்சிகள் பெரும் அளவில் நடைபெற்று வருகின்றன.

மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கான பயிற்சி அல்லது விளையாட்டு நீச்சல் பயிற்சி என்ற பெயரில், போலியான விளம்பர பதாகைகளுடன் இந்த பயங்கரவாத பயிற்சிகள் வெளிப்படையாக நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

லஷ்கர்-ஈ-தொய்பா மற்றும் ‘ஜம்மு காஷ்மீர் யுனைடெட் மூவ்மெண்ட்’ அமைப்பின் முக்கிய தலைவர்கள் ரிஸ்வான் ஹனிஸ், அமீர் ஜியா ஆகியோர் இந்த நீர்சார் பயிற்சிகளை நேரில் கண்காணித்து வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்த பயிற்சிகள் மீட்பு நடவடிக்கைகளுக்கோ அல்லது பொழுதுபோக்கு விளையாட்டுக்கோ அல்ல; மாறாக கடல் வழி ஊடுருவல் மற்றும் கடற்படை சார்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கான போர்த் தயாரிப்புகள் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதோடு, குறிப்பாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா போன்ற கடலோர மாநிலங்களுக்கு தீவிர அபாய எச்சரிக்கையாகவும் கருதப்படுகிறது.

மேலும், நேபாளம் மற்றும் வங்கதேசம் வழியாகவும், கடல் பாதைகளைக் கொண்டு இந்தியாவுக்குள் ஊடுருவ புதிய வழித்தடங்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டு வருவதாக உளவுத் துறைகள் தெரிவிக்கின்றன.

சமீப காலங்களில் நேபாளம் மற்றும் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் நிலைமாற்றங்கள், பாகிஸ்தானுக்கு சாதகமாகவும் இந்தியாவுக்கு சவாலாகவும் மாறியுள்ளது என பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

உள்பிரிவு மோதலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரியில் பரபரப்பு

Next Post

விமானப் போக்குவரத்து துறையின் ‘ஊபர்’ என அழைக்கப்படும் JetSetGo நிறுவனம்

Next Post

விமானப் போக்குவரத்து துறையின் ‘ஊபர்’ என அழைக்கப்படும் JetSetGo நிறுவனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

“அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

ஏப்ரல் 17, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!
  • “திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!
  • “அமைச்சர் மனோ தங்கராஜ் தொகுதிக்கு எதையும் செய்யவில்லை” – பத்மநாபபுரத்தில் பாஜக வேட்பாளர் பா.ரமேஷ் அதிரடிப் பிரச்சாரம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

“5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும்” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் ஆவேசப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

“திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது” – ராசிபுரத்தில் நயினார் நாகேந்திரன் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 17, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN