• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஜூன் 4, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

Epstein Files சர்ச்சை: மாயமான ட்ரம்ப் புகைப்படம் மீட்பு – அரச குடும்பத்துடன் எப்ஸ்டீனின் நெருங்கிய தொடர்புகள் அம்பலம்

athibantv by athibantv
டிசம்பர் 26, 2025
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 893 📋

Epstein Files சர்ச்சை: மாயமான ட்ரம்ப் புகைப்படம் மீட்பு – அரச குடும்பத்துடன் எப்ஸ்டீனின் நெருங்கிய தொடர்புகள் அம்பலம்

பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனைச் சேர்ந்த ரகசிய ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புகைப்படம் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!

ஜூன் 3, 2026
குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: மேற்காசியாவில் மீண்டும் கடும் பதற்றம்!

ஜூன் 3, 2026

அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த Epstein Files Transparency Act என்ற சட்டத்தின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட மறுநாளே, 16-க்கும் மேற்பட்ட கோப்புகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக தெரியவந்தது.

நீக்கப்பட்ட கோப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது ‘File 468’ என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படம். அதில், டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ட்ரம்ப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இளம்பெண்களுடன் இருப்பதைக் காட்டும் மற்றொரு புகைப்படமும் அந்த கோப்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டதால், இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட மறைப்பு நடவடிக்கையா என்ற கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, 119 பக்கங்கள் கொண்ட ஒரு முழு ஆவணம் மறைக்கப்பட்டிருந்தது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மறைப்பு முயற்சிகளில் ஒன்றாகும் என செனட் தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார். ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டியும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. ஜனநாயகக் கட்சியினரும் நீதித்துறையின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் பொது வாழ்க்கை பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில், ட்ரம்ப் தொடர்புடைய புகைப்படங்கள் மட்டும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டதால், அரசியல் ரீதியான கடும் விவாதங்கள் எழுந்தன.

இந்த நிலையில், நீக்கப்பட்ட ட்ரம்ப் புகைப்படம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பொதுவெளியில் வெளிப்படும் அபாயம் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அந்தப் புகைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீக்கத்திற்கு அதிபருக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் தரப்பின் கோரிக்கையின்பேரிலேயே சில புகைப்படங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையே, வெளியிடப்பட்ட புதிய ஆவணங்களில் முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்புடைய புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் மாளிகையின் வரவேற்பறையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்களில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களுடன் இருப்பதும், அருகில் கிஸ்லைன் மேக்ஸ்வெல் நிற்பதும் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள், ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கும் இருந்த நெருக்கமான தொடர்புகளை வெளிக்கொணர்வதாக கூறப்படுகிறது.

மேலும், 2000 ஆம் ஆண்டு ஆஸ்காட்டில் நடைபெற்ற லேடீஸ் டே விழாவில் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பால்மோரலில் நடந்த வேட்டையாடல் நிகழ்வுகள், பக்கிங்ஹாம் அரண்மனையில் எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்ட பல புகைப்படங்கள், அரச குடும்பத்துடனான எப்ஸ்டீனின் தொடர்புகளை உறுதி செய்யும் வகையில் உள்ளன.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை என ஆண்ட்ரூ மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அந்தக் கூற்றுக்கு எதிராக சாட்சியமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் இருந்து இனி மேலும் என்னென்ன அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் – 8 மணி நேர காத்திருப்பு

Next Post

அமெரிக்க சுங்க வரி அழுத்தங்களுக்கு மாற்று தீர்வு – இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் நியூசிலாந்து சந்தை

Next Post

அமெரிக்க சுங்க வரி அழுத்தங்களுக்கு மாற்று தீர்வு – இந்திய ஏற்றுமதிக்கு புதிய வாய்ப்பை உருவாக்கும் நியூசிலாந்து சந்தை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: பிரதமரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டு காத்திருப்பு!

ஜூன் 4, 2026
அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!

அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!

ஜூன் 4, 2026
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரளாவின் முதல் அதிநவீன விபத்துத் தீயணைப்பு வாகனம் இணைப்பு!

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரளாவின் முதல் அதிநவீன விபத்துத் தீயணைப்பு வாகனம் இணைப்பு!

ஜூன் 4, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: பிரதமரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டு காத்திருப்பு!
  • அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!
  • திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கேரளாவின் முதல் அதிநவீன விபத்துத் தீயணைப்பு வாகனம் இணைப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

டெல்லியில் அமித் ஷா, பி.எல்.சந்தோஷ் உடன் அண்ணாமலை அடுத்தடுத்து முக்கிய ஆலோசனை: இன்றிரவு மீண்டும் முக்கிய மீட்டிங்

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை: பிரதமரைச் சந்திக்க இன்று நேரம் கேட்டு காத்திருப்பு!

ஜூன் 4, 2026
அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!

அண்ணாமலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் வாழ்த்து!

ஜூன் 4, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN