கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகர் சரத்குமார் ஆறுதல் கூறினார்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார் ஆறுதல் கூறினார்.

செப்.27-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க, பாஜக பிரமுகர் மற்றும் நடிகர் சரத்குமார் இன்று கரூருக்கு சென்றார்.

கரூர் வேலுசாமிபுரத்தைச் சேர்ந்த சகோதரிகள் பழநியம்மாள், கோகிலா ஆகியோரின் வீட்டில் சென்று, அவர்களின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

செய்தியாளர்களிடம் சரத்குமார் கூறியது:

“கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவம் மிகவேதனையானது. இந்த துயரத்தில் இருந்து குடும்பத்தினர்கள் மீண்டும் சமநிலைக்கு வந்த பிறகு, அவர்களின் வாழ்வுக்கு தேவையான உதவிகளை நான் வழங்க முனைவர். இதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை; இது மனிதநேயத்தின் நிலைப்பாடு மட்டுமே. சம்பவம் நடந்த நாளில் நான் ஊரில் இல்லாததால், சிபிஐ விசாரணை குறித்து கருத்து கூறுவது சரியில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடைபெறும். எனது மனவேதனையை மட்டுமே பகிர்ந்துள்ளேன். எங்கு துயர சம்பவம் நிகழ்ந்தாலும், அங்கு நான் இருக்க விரும்புவேன்.”

பின்னர், உயிரிழந்தவர் வடிவேல் நகர் காவலர் குடியிருப்பில் உள்ள சுகன்யாவின் வீட்டை சந்தித்து, அவருடைய படத்திற்கு மாலை அணிந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

Facebook Comments Box