தலைவர்கள் பெயரில் திருத்தம் செய்வது சரியில்லை: பாமக பொருளாளர் கருத்து

தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படிப் புனைந்த பெயர்களில் அழைக்கப்பட்டார்களோ, அப்படியே அழைப்பதே அவர்களுக்கு மரியாதை என பாமக மாநில பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: “தமிழக அரசு தெருக்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றுவதால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. தலைவர்கள் வாழ்ந்த காலத்தில் எப்படிப் பெயர் இருந்தோ அதேபோல் அழைப்பதே மரியாதை. அதில் திருத்தம் செய்வது சரியல்ல. ஜி.டி. நாயுடு பெயரை திமுக அழித்துவிட்டது; தற்போது அரசியல் காரணமாக அவரது பெயரை பாலத்திற்கு சூட்டியது.”

அவர் மேலும் கூறினார்: “கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளதை வரவேற்கிறோம். இதனால் உண்மைக் காரணங்கள் வெளிப்படும். திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் உயிரிழந்தார் என்பது மக்கள் கவனத்திற்கு வரவில்லை. காவேரி–குண்டாறு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு, நிதியமைச்சரும் தொகுதி எம்.எல்.ஏ. வுமான தங்கம் தென்னரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

சிவகாசி மாநகராட்சி சிறப்பாக செயல்படவில்லை என்றும், கூட்டத்தின் கருபொருள் குறித்து விவாதிக்காமல் கூட்டத்தை முடிப்பது சரியல்ல என்றும் திலகபாமா தெரிவித்தார்.

Facebook Comments Box