ராமதாஸ் தலைமையில் பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அமைந்துள்ள தைலாபுரம் இல்லத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழுவைச் சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் முரளி சங்கர், கௌரவத் தலைவர் ஜி.கே. மணி, செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கட்சியின் அமைப்பு வளர்ச்சி, எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.