சட்டமன்றத் தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணியே வெற்றியை உறுதி செய்யும் – டிடிவி தினகரன்

Date:

சட்டமன்றத் தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணியே வெற்றியை உறுதி செய்யும் – டிடிவி தினகரன்

வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்க பிப்ரவரி மாதம் வரை கால அவகாசம் உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், கூட்டணி அமைப்பது தொடர்பான முடிவுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், கூட்டணிக்கு தலைமை வகிக்க விரும்பும் கட்சிகள் அமமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்றும் தெரிவித்தார்.

மேலும், சட்டமன்றத் தேர்தலில் அமமுக இணையும் கூட்டணியே ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெறும் என உறுதியாக கூறிய டிடிவி தினகரன், அமமுக ஆதரவின்றி எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்று தெளிவுபடுத்தினார்.

அமமுக தான் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்றும், டிசம்பர் 31க்குள் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த முடிவு தற்போது தாமதமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர் அருகே பரபரப்பு

வீட்டு பூட்டை திறக்க முடியாமல் ஆத்திரம் கொண்ட திருடர்கள் – ஆம்பூர்...

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த்

தூய்மைப் பணியாளர் பத்மாவின் நேர்மைக்கு தங்கச் சங்கிலி வழங்கிய ரஜினிகாந்த் சென்னையில் குப்பைகளில்...

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம்

இந்தியா–ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம்: பாதிக்கப்படும் பாகிஸ்தான், வங்கதேச ஏற்றுமதி வர்த்தகம் வரலாற்று முக்கியத்துவம்...

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடரிலிருந்து நீக்கம்

மக்களவையில் கடும் அமளி – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள்...