முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 85 ஆயிரம் பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வி!

Date:

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 85 ஆயிரம் பேர் தமிழ் தகுதித் தேர்வில் தோல்வி!

தமிழகத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலைவாய்ப்புக்காக எழுதப்பட்ட தேர்வில், தமிழ் தகுதித் தேர்வில் 85,000 பேருக்கு மேலானவர்கள் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற முடியாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2022ஆம் ஆண்டு முதல், அரசு பணியில் சேரும் அனைத்து தேர்வர்களும் தமிழ் மொழியை எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில், போட்டித் தேர்வுகளில் தமிழ்த் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் தேர்வில் மொத்தம் 50 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதில் குறைந்தது 20 மதிப்பெண் பெற்றால்தான் பாடப் பிரிவு கேள்வித்தாள்கள் மதிப்பீட்டிற்குச் செல்லும்.

இதற்கிடையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 1,996 ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 2,36,000 முதுநிலை பட்டதாரிகள் பங்கேற்றனர்.

ஆனால், அதில் 85,000 பேர் குறைந்தபட்சமான 20 மதிப்பெண்களையும் பெற முடியாமல் தமிழ்த் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் தேர்வில் இருந்து நேரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

முனைவர் பட்டம் பெற்றவர்கள், பல பட்டங்களை பெற்றவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான உயர்கல்வி பெற்றவர்கள் தாய்மொழியான தமிழில் கூட குறைந்தபட்ச மதிப்பெண் பெற முடியாத நிலை ஏற்பட்டிருப்பது தமிழ் நேயர்களிடையே கவலை மற்றும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அமலாக்கத்துறை சோதனை தடுப்பு விவகாரம் – மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம்...

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு

ரஷ்யாவில் 146 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியான பனிப்பொழிவு ரஷ்யாவில் கடந்த 146...

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் சகோதரர்கள்...

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்

தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் தமிழகத்தில் வாழும் அனைத்து...