‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில், தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, கடற்கரை பகுதியிலிருந்த 10க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
இந்த கடல் அலைகள் காரணமாக, கடற்கரை ஓரங்களில் உள்ள மீனவர்கள் பொருளாதார மற்றும் வாழ்வாதார பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, மீனவர்கள் அதிகாரிகளிடம் கடற்கரை பாதுகாப்புக்கான தடுப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.