காசா பகுதியில் உள்மோதல்: 8 பேரை சுட்டுக் கொன்ற ஹமாஸ் குழுவினர்

Date:

காசா பகுதியில் உள்மோதல்: 8 பேரை சுட்டுக் கொன்ற ஹமாஸ் குழுவினர்

இஸ்ரேல்–காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், காசா பகுதியில் ஏற்பட்ட உள்மோதலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 8 பேரை சுட்டுக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் ராணுவத்துக்கும், காசா பகுதியை ஆட்சி செய்துவரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான போர் நடைபெற்றது. இதனை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் முன்னெடுத்த முயற்சியின் மூலம் இரு தரப்பினரும் செப்டம்பர் 9-ம் தேதி அமைதி உடன்பாட்டில் இணக்கம் தெரிவித்தனர். பின்னர், அக்டோபர் 13-ம் தேதி எகிப்தில் நடைபெற்ற காசா அமைதி உச்சிமாநாட்டில் அந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

அந்த ஒப்பந்தத்தின் படி, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கைவிட்டு காசா பகுதியிலிருந்து விலக வேண்டும், மேலும் அந்த பகுதியை சர்வதேச கண்காணிப்பு குழு நிர்வகிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த நிபந்தனையை ஹமாஸ் மறுத்தது.

இந்நிலையில், ஒப்பந்தத்தின் படி இஸ்ரேல் படையினர் வெளியேறியதும், ஹமாஸ் தங்கள் கட்டுப்பாட்டை மீண்டும் பலப்படுத்தியது. அதே சமயம், காசா நிர்வாக உரிமை குறித்து ஹமாஸ் மற்றும் பிற பாலஸ்தீன ஆயுதக் குழுக்களுக்கிடையே நேற்று மோதல் வெடித்தது.

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களில், கண்கள் கட்டப்பட்ட 8 பேர் மண்டியிட்ட நிலையில் ஹமாஸ் வீரர்கள் அவர்களை சுட்டுக் கொலை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. சுடும் போது அவர்கள் “அல்லாஹு அக்பர் — இவர்கள் இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர்கள்” என கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம் தெரிவித்து,

“ஹமாஸ் குழுவினர் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துள்ளனர். அவர்கள் உடனடியாக ஆயுதங்களை கைவிட வேண்டும்; இல்லையெனில், நாங்கள் நடவடிக்கை எடுப்போம். அது விரைவில் நடக்கும்,”

என எச்சரித்தார்.

மற்றொரு புறம், இஸ்ரேல் அரசு, “அமைதி ஒப்பந்தப்படி கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் உடலை ஹமாஸ் ஒப்படைக்காவிட்டால், காசாவுக்கான நிவாரண வாகனங்களில் பாதியை தடுத்து நிறுத்துவோம்” என எச்சரித்தது.

இதையடுத்து, ஹமாஸ் நேற்று முன்தினம் 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உடல்களை செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. ஆனால், அவற்றில் ஒருவரின் உடல் தங்களது கைதியாக இல்லை என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து ஆர்பி. உதயகுமார் கருத்து

“சரியான முடிவு எடுக்காவிட்டால் சிரஞ்சீவியின் நிலை!” – நடிகர் விஜயை குறித்து...

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு அமீரக அணி

டி20 உலகக் கோப்பை 2026 தொடருக்கு தகுதி பெற்றது ஐக்கிய அரபு...

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம் கோவை மாவட்டம்...

திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் இடைவிடாத கனமழை: சம்பா பயிர்கள் சேதம் – இயல்பு வாழ்க்கை...