இந்திய பொருளாதாரம் இந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலரை தாண்டும் நிலையில் இருக்கிறது என்று தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.
டெல்லியில் இந்திய தனியார் முதலீட்டு சங்கம் நடத்தும் பசுமை கொள்கை சார்ந்த மாநாட்டில் பேசிய அவர், கடந்த மார்ச் மாதத்தின் முடிவில் இந்திய பொருளாதார மதிப்பு 3.9 டிரில்லியன் டாலராக இருந்தது, தற்போது அது 4 டிரில்லியன் டாலரை எட்டியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், 2070 ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நாடாக இந்தியா மாறும் என்ற இலக்கை நமது அரசு உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.