துபாயில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிக்குப் பின்னர் விபத்தில் உயிரிழந்த போர்விமானி விங் கமாண்டர் நமன்ஸ் சியால் உடல், அரசு மரியாதைக்குரிய முறையில் சொந்த ஊரான இமாச்சலப் பிரதேசம், காங்க்ராக்கு அனுப்பப்பட்டது.
துபாயில் கடந்த 21ம் தேதி சர்வதேச விமானக் கண்காட்சியின் போது சூலூர் விமானப்படை தளத்தை சேர்ந்த “தேஜாஸ்” போர் விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் மோதி விபத்துக்குள்ளானது. விங் கமாண்டர் நமன்ஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடல் முதலில் சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கு விமான படை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் பிற அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதிச் சின்னமாக அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின், விங் கமாண்டர் நமன்ஸ் உடல் அவரது சொந்த ஊர் காங்க்ரா, இமாச்சலப் பிரதேசத்திற்கு இறுதிப் பயணத்திற்கு அனுப்பப்பட்டது, அங்கு குடும்பத்தினர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்.