கார்த்திகை மாதப் பிறப்பையொட்டி மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் – சென்னை கோயில்களில் பக்தர்கள் கூட்டம்

Date:

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், கார்த்திகை மாதத்தின் முதல் நாளான நேற்று மாலை அணிந்து 41 நாள் மண்டல விரதத்தை தொடங்கினர். இதனால், சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்கள் முழுவதும் பக்தர்களின் பெரும் திரளால் பரபரப்பாக காணப்பட்டது.

கேரளாவின் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை முதல் மண்டல பூஜை தொடங்கி, மார்கழி–தை மாதங்களில் மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் நடைபெறும். இவ்வருட மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலைக் கோயில் நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறந்து, தீபாராதனைக்குப் பிறகு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

சபரிமலை ஏறும் பக்தர்கள், வழக்கமாக கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து 41 நாள் விரதம் இருந்து, பின்னர் இருமுடி கட்டிக் கொண்டு பாதயாத்திரையாக செல்கின்றனர். அதையடுத்து, நேற்று ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர்.

சென்னையின் கோடம்பாக்கம் மகாலிங்கபுரம், கே.கே.நகர், அண்ணாநகர், ராஜா அண்ணாமலைபுரம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐயப்பன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முதல்முறையாக சபரிமலைக்குச் செல்லும் கன்னிசாமிகள், குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் குருசாமிகளால் மாலை அணிவிக்கப்பட்டனர்.

‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷங்களுடன் மாலை அணிந்து, பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விரதத்தைத் தொடங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக மசூத் அசார் மிரட்டல்

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆயிரக்கணக்கான தற்கொலை தீவிரவாதிகள் தயாராக உள்ளதாக...

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்

ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக...

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர தீர்வு தேவை

வனப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் பார்த்தீனியம் செடிகள் – வனவிலங்குகளின் பாதுகாப்புக்கு நிரந்தர...

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை” – இயக்குநர் மோகன் ஜி

“என் இயக்கத்தில் வெளியான எந்தப் படமும் தயாரிப்பாளர்களுக்கு வசூல் இழப்பை ஏற்படுத்தவில்லை”...