ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்

Date:

சென்னை ரயில்வே கோட்டம், ‘ரயில் மதத்’ செயலியுடன் இணைந்து, ரயில்வே உணவகங்களில் குறைகளை தெரிவிக்க க்யூஆர் கோடு வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், பயணிகள் உணவகங்கள் தொடர்பான கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் புகார்களை பதிவு செய்யலாம்.

பயணிகள் உணவகங்களில் அதிக கட்டணம், சேவை குறைபாடு, உணவின் தரம் மற்றும் அளவு, தண்ணீர் மற்றும் உணவு கிடைக்காதது, சுகாதார நிலை போன்ற விவரங்களைச் சேகரித்து பதிவேற்ற முடியும்.

பயணிகள் ரயில் நிலைய உணவகங்களில் உள்ள க்யூஆர் கோட்டை தங்களது செல்போனில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதில், உணவகத்தின் இருப்பிடம், நிலையக் குறியீடு போன்ற விவரங்கள் இருக்கும். அதை உறுதிசெய்து, ‘ரயில் மதத்’ செயலியில் செல்போன் எண்ணை பதிவேற்றிக், புகாரை அனுப்பலாம். பிறகு, குறிப்பு எண்ணுடன் ஒரு ஒப்புகைச் சீட்டு ரயில் செயலியில் கிடைக்கும்.

அனுப்பப்பட்ட புகார்களை உடனுக்குடன் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜம்மு–காஷ்மீரில் நள்ளிரவு அதிர்ச்சி: நவ்காம் காவல் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி – 9 பேர் பலி; பலர் தீவிர காயம்

ஜம்மு–காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே உள்ள நவ்காம் காவல் நிலையத்தில் நேற்றிரவு (நவம்பர்...

பிஹார் தேர்தல் முடிவு – அனைவருக்கும் விழிப்புணர்வு பாடமாகும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்து அரசியல் தரப்பிற்கும் முக்கியமான பாடங்களை...

உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் போர்ச்சுகலுக்கு அதிர்ச்சி தோல்வி – ரொனால்டோவுக்கு ரெட் கார்ட்

2026 ஃபிபா உலகக் கோப்பை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகளில் நடைபெற...

மீண்டும் காவலராக திரைக்கு வரும் சுதீப்!

கன்னட நடிகர் கிச்சா சுதீப், விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் நடித்த மேக்ஸ்...