எஸ்ஐஆரை ஆதரித்து அதிமுக உச்ச நீதிமன்றம் சென்றது வெட்கக் கேடு’ – முதல்வர் ஸ்டாலின்

Date:

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி பாக முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதில், அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு சென்றது வெட்கக் கேடு என தெரிவித்துள்ளார்.

“தங்களது கட்சியை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டு, தற்போது எஸ்ஐஆரை ஆதரித்து வருவது நெறியற்றது. இதற்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நீதிமன்றம் சென்றுள்ளது. மக்களின் வாக்குரிமை எந்தவிதமான தடையின்றி பாதுகாக்கப்பட வேண்டும்” என ஸ்டாலின் குறிப்பிட்டார்.

அவர், தேர்தல் ஆணையத்தின் கீழ் நடைபெறும் வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் குறித்து செயல்படும்போது, BLO மற்றும் பொதுமக்களுக்கு உதவியாக கட்சியினர் நடந்து, வாக்காளர்கள் எந்தவொரு இடையூறும் இல்லாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஸ்டாலின் மேலும் கூறியது: “கொளத்தூரில் வெற்றி உறுதி. இதை மற்ற தொகுதிகளுக்கும் எடுத்துக்காட்டாக மாற்ற நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும். வாக்காளர் சேகரிப்பு பணியில் எந்த சுணக்கம் இல்லாமல் செயல்பட வேண்டும். நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை நடைபெறும் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள் என நம்பிக்கை இருக்கிறது” என்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...