தமிழக சட்டப்பேரவை இன்று தொடக்கம்
தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 14) ஆரம்பமாகிறது. கடந்த மாதம் பேரவைத் தலைவர் மு. அப்பாவு இதுகுறித்து அறிவித்திருந்தார்.
இதற்கமைய, கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பதைக் தீர்மானிக்கும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நேற்று அப்பாவு தலைமையில் நடந்தது. இதில் பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகள் பங்கேற்றன. பாமக சார்பில் ஜி.கே.மணி கலந்துகொண்டார்.
பின்னர் அப்பாவு கூறியதாவது: அலுவல் ஆய்வுக் குழுவின் முடிவின்படி, சட்டப்பேரவைக் கூட்டம் அக்டோபர் 14 முதல் 17 வரை நடைபெறும்.
இன்று காலை 9.30 மணிக்கு பேரவை கூடும். முன்னாள் எம்.எல்.ஏக்கள் 8 பேரும் முக்கிய தலைவர்களும் மரணமடைந்ததை ஒட்டி இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்படும்.
15-ம் தேதி கூடுதல் மானியக் கோரிக்கை அளிக்கப்படும்;
16-ம் தேதி அதற்கான விவாதம் நடைபெறும்;
17-ம் தேதி விவாதத்துக்கு அரசு தரப்பில் பதில் உரை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.