இனப்படுகொலை குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி கைது வாரன்ட்!

Date:

இனப்படுகொலை குற்றச்சாட்டில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக துருக்கி கைது வாரன்ட்!

காசா போருக்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவரது அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டுள்ளன. இதனையடுத்து, துருக்கி அரசு கைது வாரன்ட்களை பிறப்பித்துள்ளது.

இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், ராணுவத் தலைமை அதிகாரி உட்பட மொத்தம் 37 அதிகாரிகள் மீது துருக்கி இந்த வாரன்ட்களை வெளியிட்டுள்ளது.

துருக்கி வெளியிட்ட அறிக்கையில், காசா பகுதியில் துருக்கி கட்டிய துருக்கி–பாலஸ்தீன நட்பு மருத்துவமனை மீது மார்ச் மாதத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர்,

“துருக்கியின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை; இது அதிபர் எர்டோகனின் அரசியல் நாடகம் மட்டுமே,”

என்று கடுமையாக எதிர்த்தார்.

மாறாக, ஹமாஸ் அமைப்பு துருக்கியின் இந்த முடிவை வரவேற்று, “பாலஸ்தீன மக்களுக்கான நீதி மற்றும் மனிதநேயம் மீதான உறுதியை இது வெளிப்படுத்துகிறது,” என்று தெரிவித்தது.

காசா போருக்கு எதிராக துருக்கி முன்பே கடுமையான நிலைப்பாடு எடுத்திருந்தது. கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தொடர்ந்த இனப்படுகொலை வழக்கில் துருக்கியும் இணைந்தது. தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நடத்திய முயற்சியால் அக்டோபர் 10 முதல் இஸ்ரேல்–ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் அமலில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...

ஈரான் மீது நேரடித் தாக்குதல்: “ஆபரேஷன் எபிக் பியூரி”… டிரம்ப் விடுத்த எச்சரிக்கை… ஈரானின் பதிலடி

ஈரானில் இன்று (பிப்ரவரி 28, 2026) தொடங்கியுள்ள ராணுவ நடவடிக்கைகள் மற்றும்...

தற்போதைய நிலவரப்படி… அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ஒரு மிகப்பெரிய தாக்குதல்…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இன்று (சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2026) போர்...

சேலம்: நடு ஏரியில் நின்ற படகு – கைக்குழந்தைகளுடன் தவித்த பயணிகள்! மாநகராட்சிக்கு எதிராகக் கொந்தளிப்பு

சேலம்: நடு ஏரியில் நின்ற படகு - கைக்குழந்தைகளுடன் தவித்த பயணிகள்!...