எஸ்ஐஆர் குறித்து விவாதம்: ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை (நவம்பர் 9) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் காலை 10 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்,” என கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.