கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை
தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி. செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
அலோசனையில், நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுவதும், எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்குவது போன்ற விவரங்களும் பரிசீலிக்கப்பட்டது.