மறுபிரதி சான்றிதழ் வழங்க தாமதம்: காரணம் என்ன? – தேர்வுத் துறை இயக்குநர் விளக்கம்
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான மறுபிரதி சான்றிதழ்கள் வழங்க தாமதம் ஏன் என்ற கேள்விக்கு தேர்வுத் துறை இயக்குநர் சசிகலா விளக்கம் அளித்துள்ளார்.
தேர்வுத் துறையின் விளக்கம்:
- ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் பெரும்பாலும் உடனடியாக செயல்படுத்தப்படுகின்றன.
- தேவையான தகவல்கள் முழுமையாக வழங்கப்படாத விண்ணப்பங்களில்தான் தாமதம் ஏற்படுகிறது.
- குறிப்பாக தேர்வு மாதம், ஆண்டு, பதிவு எண் போன்ற முக்கிய தகவல்கள் தவறினாலோ, முழுமையாக இல்லாவிட்டாலோ பரிசீலனையில் கூடுதல் நேரம் எடுக்கிறது.
- இதுபோன்ற தாமதங்களை தவிர்க்க எதிர்காலத்தில் கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டவை:
- உண்மைத்தன்மைச் சான்றிதழ்கள் – 13,30,389
- மறுபிரதி சான்றிதழ்கள் – 65,739
- சான்றிட்ட மதிப்பெண் நகல்கள் – 13,765
- புலப்பெயர்வு சான்றிதழ்கள் – 38,886
கல்வியாளர்கள் கருத்து
ஆனால் ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் கூறுவதாவது:
- அரசு இணையதளத்தில் மாணவர்கள் தவறான தகவல்கள் பதிவேற்ற முடியாது.
- தவறுகள் இருந்தால், விண்ணப்பத்தை நிறுத்தாமல் மாணவர்களை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்த வேண்டும்.
- தற்போது விண்ணப்பங்கள் நீண்ட நாட்கள் நிலுவையில் வைக்கப்படுவதால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.