எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில்

Date:

எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சிஎம்எஸ்-03 செயற்கைக்கோள் நாளை விண்ணில்

இந்தியாவின் நவீன ராணுவ-கடற்படை தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் சிஎம்எஸ்-03 (ஜிசாட்-7ஆர்) செயற்கைக்கோள், நாளை (நவம்பர் 2) மாலை 5.26 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

ஜிசாட்–7 செயற்கைக்கோளின் ஆயுள் முடிவடைவதால், அதற்குப் பதிலாக ரூ.1,600 கோடி செலவில் இஸ்ரோ வடிவமைத்துள்ள உயர்தர சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது. 4,410 கிலோ எடையுடைய இந்த செயற்கைக்கோள், 170 கி.மீ முதல் 29,970 கி.மீ வரை கொண்ட புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இது இஸ்ரோ இதுவரை ஏவிய மிகப்பெரிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளாகும்.

இந்த செயற்கைக்கோள் கடற்படை, ராணுவங்களுக்கு பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை வழங்கும். இந்தியக் கடல் எல்லைகள் கண்காணிப்பு, போர்க்கப்பல்–விமானங்களுக்கிடையேயான தொடர்பு ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

இது எல்விஎம்-3 ராக்கெட்டின் ஏழாவது பயணம். இதே ராக்கெட்டின் மூலம் சந்திரயான்–3 விண்கலமும் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது. ஏவுதலுக்கான 24 மணி நேர கவுண்ட்டௌன் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இறுதிக்கட்ட ஆயத்தப் பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தமிழகத்தில்...

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு திருப்பரங்குன்றம் தீபத்தூண்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய சிவில் விருது ‘ஆர்டர்...

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?

வங்கதேசப் போரில் பாகிஸ்தானின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? மது, மாது, ஊழல் –...